வீறுதமிழுக்கு விழா: கோவையில் கொண்டாட்டம்

தமிழியப் புரட்சிக் கவிஞர் வீறுகவியரசர் முடியரசனாரின் 103ம் வெள்ளணி நாள் இன்றாகும்.

இதனை முன்னிட்டு கோவை, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி அரங்கத்தில் ‘வீறுதமிழுக்கு விழா’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முன்னிலைத் தமிழ்ச்சான்றோர் பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள வலைத்தளத் தொடக்கம், வீறுகவியரசர் முடியரசனார் நினைவுப் புலமைப் பரிசில் முதலானவை இன்றைய நிகழ்வின் சிறப்புகளாகும்.

வீறுகவியரசர் வெள்ளணி நாளை முன்னிட்டு 92 ஆண்டு கால வரலாறு கொண்ட இலங்கை நாளிதழ் வெளியிட்ட சிறப்புக் கட்டுரையை இங்குப் படிக்கலாம். கட்டுரையை அவைக்களச் செயலாளர் முனைவர் தமிழ் முடியரசன் எழுதியிருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published.