கட்டுரை

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் யாப்பு ஆளுமை

முனைவர் சே.செந்தமிழ்ப்பாவை, (பேராசிரியர் / இயக்குநர், தமிழ்ப்பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3 முன் குறிப்பு :-     இந்திய ஒன்றிய அரசின் தன்னாட்சி நிறுவனமாகிய சாகித்திய அகாதெமி, சென்னை பல்கலைக்கழகம், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் ஆகின இணைந்து 18.2.2022 வெள்ளிக்கிழமை சென்னை மெரீனா வளாகம் சென்னை பல்கலைக்கழகப் பவளவிழாக் கலையரங்கில் நடத்திய வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு விழாவில் நடைபெற்ற வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு உரையரங்கத்தில் அறிஞர் பெருமக்களால் படிக்கப்பட்ட கட்டுரைகள்: பொதுத் தலைப்பு …

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் யாப்பு ஆளுமை Read More »

நூற்றாண்டு நாயகர் கவியரசர் முடியரசன்

சென்னிமலை தண்டபாணி     வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அக்டோபர் 2019 “இனிய உதயம்” இலக்கிய இதழ் வெளியிட்ட கட்டுரை ‘சுற்றிவ ளைத்திடும் எத்துய ரத்தையும்சுட்டுமு டித்ததை – எறிவேனேசொத்துந லத்தினை முற்றஇ ழப்பினும்சொற்றமி ழுக்கெனைத் – தருவேனே”என்ற சூளுரையோடு, தன்மானம் குன்றாமல் தலைநிமிர்ந்து வாழ்ந்த வீறுகவியரசர் முடியரசனாரின் நூற்றாண்டு விழா 7.10.2019 அன்று காரைக்குடியில் கொண்டாடப்படுகிறது. 7.10.1920ல் பெரியகுளத்தில் பிறந்த இந்தப் பாட்டுப்பறவை 78 ஆண்டுகள் ஒரு திங்கள் இருபத்து எட்டு நாள்கள் வாழ்ந்து, …

நூற்றாண்டு நாயகர் கவியரசர் முடியரசன் Read More »

தமிழில் வேற்றுமொழிச் சொற்கள் கலப்பது தீமையா? வீறுகவியரசர் காட்டும் வழி

ஞா.அருள் ஞான வித்யா ‘வீறுகவியரசர் முடியரசனார் படைப்புலகம்’ நூலில் ‘வீறுகவியரசரின் இளம்பெருவழுதி காப்பியத்தில் மொழிக்காப்பு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற கட்டுரை. முன்னுரை மதுரைப் பல்கலைக்கழகம் பாடமாக வைப்பதற்கு நாடகக்காப்பியம் ஒன்று இயற்றித் தருமாறு வீறுகவியரசரை வேண்டியதால் ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்னும் புறநானூற்றுப் பாடலைப் பாடிய புலவரும் புரவலருமாகிய கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பெயரில் முடியரசனார் நாடகக் காப்பியம் இயற்றினார். அந்நாடகக் காப்பியத்தில் காணலாகும் மொழிக்காப்புணர்வை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இளம்பெருவழுதி உலகப் புகழுக்குரிய ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ …

தமிழில் வேற்றுமொழிச் சொற்கள் கலப்பது தீமையா? வீறுகவியரசர் காட்டும் வழி Read More »

தந்தை பெரியாரின் ‘கடவுள் வாழ்த்து’

முடியரசனார் தூண்டுதலால் தந்தை பெரியார் ‘கடவுள் வாழ்த்து’ உரைத்த கதை – கம்பனடிசூடி பழ.பழனியப்பன் என்னை வழிநடத்திய அறிஞர் பெருமக்களுள் மு.வ அவர்களுக்கு அடுத்தவராய் நான் மதிப்பது வீறுகவியரசர் முடியரசனார் அவர்களைத்தான்.. நான் காரைக்குடி மீ.சு.வி பள்ளியில் இரண்டாண்டுகள் படித்தபோது முடியரசனாரிடம்தான் தமிழ் பயின்றேன்.அப்போது என்னைப் பெரியார் வழியில் வழிநடத்தியவர் அவர்.ஓய்வுநேரங்களில் ஆசிரியர் ஓய்வறையில் அவரோடும் ஆசிரியர் தமிழண்ணலோடும் விவாதிப்பதற்குரிய உரிமையைக் கொடுத்திருந்தார். கம்பனடிப்பொடியாரிடம் நான் அடிமையாவதற்கு முன்பே எனக்கு கம்பராமாயணத்தில் ஈடுபாடு உண்டாக்கியவர் அவர்தான். ‘உலகம் …

தந்தை பெரியாரின் ‘கடவுள் வாழ்த்து’ Read More »